Thursday, January 5, 2012

முற்றச்சித்திரம்


நிலவும் துகளாகத் தயார்
அடுத்த பிறப்பு
உன் கைகளால் கோலமாகும்
மாவென்றால்

அழகி உந்தன்
ஆட்டோகிராபை
தன்  மார்பில்
வாங்கிக் கொள்ளுது பூமி

இன்றுதான் நானறிந்தேன்
பூமியிலும் வானவில்
தோன்றுமென்று அறிந்தேன்
உன்னாலே!

அழகே! அழகாய்
கோலம் போடுவதைக்
குறைத்துக்கொள்
அப்புறம் பொன் விலைக்கு
போட்டியை உன்முற்றத்து
மண் விலையும் ஏறிப்போகும்


எழிழே! உன் திறம்
இறைவன் அறிந்திருந்தால்
உன்னைத்தான் உலகம்
படைக்க கேட்டிருப்பான்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்