Saturday, March 3, 2012

காதலும் வெளிநாட்டு மாப்பிளையும் - 2

காதலும் வெளிநாட்டு மாப்பிளையும் : 1
மு.கு. - கருத்து எதிர்ப்பாய் தெரிந்தால் 
            இரண்டு வழி இருக்கிறது... 
            1) திரையின் வலப்புறம் "X" சொடுக்கி பக்கத்தை மூடவும்
            2) கீழே கருத்தில் தெரியுங்கள்...புரியாதது புரியும் கசப்புகள் மறையும்


கடவுளுக்குமுன் வைத்து
அரங்கேறும் ஒரே அநீதி...
காதலை கொன்று தளிரும் 
திருமணங்கள் தான்...

அப்பனாம் மகளுக்கு...
அவளை திருமண சந்தையில் விற்று
சட்டப்படி மாமனாகிறான்...

தாலி  காக்கும் வேலியாய் 
இருந்த காலங்கள் மலையேறிபோனது...
இன்று சிறை வைக்கும் வேலி...

திருமணங்களால் 
இன்று பல சீதைகள்
ராமனின் அசோகா வனத்தில்
வாடி வதங்கி போகின்றனர்...

மனதில் ஒருவன்
மாலையோடு மற்றொருவன்...
கட்டிலில் படுத்தால் தான் 
கற்புக்கு களங்கம்...
இருதயத்தில் சுமந்தால் இல்லை
என்று கண்ணகி தேசத்தில்
விதிகள் மாற்றி எழுதப்படுகிறது...

பாழும் கிணற்றில் தள்ளினாலும்
உனக்கு துணையாக்க மாட்டேனென்று
மகள் வாழ்வை கசப்பாக்குபவன்பவன் கோடி...
கொன்று போட்டாலும் போடுவேன்
சாதி மதம் தாண்ட மாட்டேன் என்று
தாமரைகளை  சகதிக்குள் புதைப்பவன் கோடி...

கொள்வதற்கு  பதில்
எங்களிடம் கொடுங்கள் வாழவைப்போம் 
என்ற காதலின் கேள்விகளுக்கு 
பதில் கிடைத்திருந்தால்
பலப் புதல்விகளின் வாழ்வு
கண்ணீரில் மிதந்திருக்காது...
மரணத்தில் முடிந்திருக்காது...

காதல் மலர்...
பாச பாதங்களுக்கு அடியில் 
நசிந்து போகின்றன... 
பெண் நான் என்ன செய்வேன்
என்கிறாள் மதுரை எரித்தவளின்
கொள்ளுப் பேத்தி...

இறந்த காதலுக்கு 
ஆறுமாதம் கண்ணீரஞ்சலி செய்தவள்...
வருங்காலத்தின் skype அழைப்புக்கு 
காத்திருப்பதால் நினைக்கக் கூட 
நேரமில்லாது போவது எப்படி...

வரும்  கணவனிடம்
இறந்த காதலை சொல்லிவிட்டேன்...
"இறந்த காலத்தை மறந்துவிடு "
என்றான் அவன் என்று பிதற்றுகிறாள்...
மறக்கப்படது அவைகள்...
அவன் இருதயத்தில் புதைக்கப்பட்டிருக்கும்...
நிச்சயம் ஒரு நாள்
நினைவுக்கு வருகையில்
வார்த்தை பிரளயாமாய் வரும்
நிச்சயம் உனை காயப்படுத்தும் 
மறவாதே...

காதல் என்று சொல்லிவிடுவதாலே...
மகளின் காதலனைத்  தவிர 
எவனும் நல்லவனாகத் தெரிகிறான்...
அந்த மடமையில் தானே
அயோக்கியனுக்கு 
மகள்களை உயிரோடு 
நரபலி கொடுக்கிறான்...
புஷ்பக  விமானத்தில் ராமனோடு
அசோக வனத்திற்கு பயணம்... 

காதலுக்கு...
உறவுகள், சமுகம்,
சாதி, மதம், பணம், வயது
என்று எல்லாம் தெரிந்து 
எதிரி ஆகையில்...
அப்பாவி அயல்நாட்டு 
தொழிலதிபர் அறியாமல் பெரும் எதிரி ஆகிறான்...

காதல் துவைத்து சுத்தமாக்க
உடையில் உண்டான கறையல்ல,
உடலில் எழுதப்பட்ட பச்சையம்.
சுட்டு காயமாக்க வேண்டும்.
தழும்பு நிச்சயம் மிஞ்சும்.
ஏனோ  இந்த விதிகள்
இந்தப்** பெண்களின்
திருமண வேள்விகளில் பொசுங்கி போகுது...

** - காதலை தெரிந்தோ நிற்பந்தத்திலோ, உதறி எரிந்து திருமணம் செய்யும் பெண்கள்



1 comment:

  1. Yaaraoyoe kuththi kaatra maadhri theriudhae ??? :)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்