Tuesday, March 20, 2012

துளிகள் - 5



துளிகள் - 1 | 2 | 3 | 4
காகிதத்தில் என் பேனா
எழுதிய என் கவிதைகளைவிட

என் தலையணையில்
என் கண்ணீர் எழுதிய வரிகள் தான்
என் காதலை அதிகம் சொல்லும்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என் காதல் குழந்தையை
தனிமை திருவிழாவில்
தொலைத்துவிடும் ஆசையில்
தினம் அழைத்து செல்கிறேன்...

அது திருவிழா கடைகளில்
விற்கப்படும் உன் நினைவுகளை
என்னை நச்சரித்து வாங்கி
நிரப்பிக்கொள்கிறதுகிறது  என் இருதயப் பையை...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உனக்கு  பெயரிட்ட
உன் பெற்றோர் கவிஞனடி
என்று பாடியே தோற்றுப் போன
என் காதல் இன்று என் மகள் பெயராய்...

இன்று என் மகளைப் பார்த்து
அவள் காதல் பாடுகிறது
நான் கவிஞன் என்று...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அன்று  முதல்
நான்ஆக்ஸிஜனைவிட
உன்  நினைவைத் தான்
அதிகமாய் சுவாசிக்கிறேன்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


 என் காதலை கவிதையாக்குகிறேன்
 என்று என்மேல் குற்றம்...

இங்கு  என் காதல்
கரு சுமக்கும் காகிதமாக
கருத்துக்கு மொழியாக
 உரு கொடுக்கும் மையாக...

இன்று சொல்கிறேன்...
என் காதல் தான்
 என்னைக் கவிஞனாக்கிருக்கிறது
எனக்கு முகவரி கொடுத்திருக்கிறது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அவளை மறந்துவிட
ஒரு சாலையில் போய்கொண்டிருக்கிறேன்
சாலையோரத்து  சுவரெல்லாம்
அவள்  நினைவு விளம்பரமாய்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன்னை 
என் ஒரு இருதயத்தால் மட்டும்
நினைத்துக் கொண்டிருந்ததால்
 மறப்பது அவ்வளவு கடினமாக இருந்திருக்காது...

பேனா, கைப்பேசி, வலைப்பூ
என்று செயற்கை இருதயம்
இத்தனை பொருத்தி
உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

நாம் புரட்சியாளர்கள்

வெறும் தங்கம் மாற்றியா
நம் திருமணம் நடந்தேற வேண்டும்

அதான் உன்/என் விழி வழி
wireless முறையில்
இருதயம் மாற்றியே ஜோடி நாம்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

 காதல் கெட்ட
 வார்த்தையாகவே இருந்தாலும்

அதை நான்
சொல்லும்  முன்
நீ கோபம் கொண்டது ஏன்?

தொலைவுணர்வு* சொல்லியாதா?
காதலின்றி எப்படி நமக்குள்?

தொலையுணர்வு - telepathy

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

எதோ சொல்ல நினைத்து
என் கவிதைகள் தொடங்கப்படுகிறது...

இருந்தும் ஏனோ எதுவுமே
சொல்லப்படாமல் முடிந்து போகிறது....

என் கவிதைகள் எல்லாமே
என் இயலாமை, கோழைத்தனத்தின் சாயங்கள்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என் தனிமைக் காகிதத்தில்
எழுதி  நிரப்பி காலியாகிப் போகும்
உயிர்"மை" என் கவிதை...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்