Tuesday, March 27, 2012

மூடிக்கிடப்பவைகள் - 3

மூடிக்கிடப்பவைகள் - 1 | 2

வந்துவிட்ட காதலை
காதலியிடம் சொல்லுபவர்களை விட...

முகப்புத்தக சுவரிடம் 
புலம்புவர்கள்தான் அதிகம்...

அதனால் தான் உலகம்
காதலர்களை கிறுக்கன் என்கிறது
கவிதை எழுதுபவனை
காதலிப்பவன் என்கிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*'

 சோதித்து 
தயார்படுத்த வேண்டிய கல்வி
என்று சோதனையால்
பயம்மேற்றி பின்தங்க  வைத்ததோ... 

அன்றே... மனிதனின் 
அறிவு  சுமையாணது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*'

நீ விரல்விட்டு 
கடையும்  உணவுப் பாற்கடலில்

அமிழ்தம் இருக்குதோ இல்லையோ
நிச்சயம்  நச்சு இருக்குது...

நவீன உலகின்
அரக்க உடலே உனக்கு விருந்தாக...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்