Thursday, March 22, 2012

மின் குருடு


8 கோடி ஜோடி
கண்களிருந்தும் நாங்கள்
குருடாகிப் போகிறோம்
எங்கள் அரசின் அலட்சியத்தில்

அரசே! நீ ஏற்றிய பெட்ரோல் விலையில்
எலெக்ட்ரானெல்லாம் பயணத்தை குறைத்தோ?

மாரி மாறி போனாலும்
சூரியனின் சூடு மங்கிப் போகவில்லை
சூரிய மின்கலம் இருந்தும்
இங்கே மின்சாரப் பற்றாக்குறை

பொதிகை தென்றல் தொலைந்தாலும்
பாலை வேட்கை இன்னும் வீசுது
காளானாய் முளைத்த காற்றாலை இருந்தும்
கரண்ட் மட்டும் போதவே மாட்டேன் என்கிறது

ஆட்சியுரிமைக்கு வரி போடும் குறி இருக்கு
விலை பளுவால் கஜான நிரப்பி
சுரண்டிப்போக வழி இருக்கு
ஐந்தாண்டுகள் ஒருமுறை தேர்தல்
அது ஒன்றால் தான் மக்களே நினைவிலிருக்கு

படித்தவனென்று பிதற்றிக்கொள்ளும்
பட்டினத்துக்காரனுக்கெல்லாம்
அவன் வீட்டில் வெளிச்சம் இருக்கும்வரை
அரசியலெல்லாம் ஒவ்வாது
பறிபோகும் இவன் உரிமையெல்லாம்
செய்தித்தாளில் வெறும் செய்தி இவனுக்கு

இந்த நேரம்
நெடுந்தொடரால், வீண் விளக்கால்
வீணாகும் மின்சாரம் இனி இல்லை...
மாணவர்கள், குறைகின்ற மதிப்பெண்ணிற்கு
காரணமாய் குற்றவாளிக் கூண்டிலிது
விவாசாயி சிறுதொழிலாளி
இயல்பில் புது பளுவிது...

அரசே!
நீ எதை சாதித்தாயோ இல்லையோ
ஊரில் ஒரு 8 மணிநேரம் அமைதி தந்தாய்...
ஓயாத உழைப்புக்கு உவமையான
இயந்திரங்களுக்கு ஓய்வளித்தாய்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்