Sunday, March 4, 2012

துளிகள் - 3

துளிகள் - 1 | 2 
புணர்தலின் வலிகளை சுகம் என்னும் கூட்டம்
உணர்வின் வழிகளை வலி என்பதில் வியப்பென்ன...
உலகம் செய்யப்பட்டதென்னவோ அன்பாலே.
உயிர்களில் பல செய்யப்பட்டதென்னவோ 
வெறும் கட்டில் சுகத்தால் தானே...
அதான்  அதை தேடும் அவர்களின் 
இயல்பிலிருந்து பிறழ்பவர்கள்
தீட்டாகிப் போனார்கள் காதல் உட்பட...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

புத்தகமோ... புத்தக கணினியோ....
மூடி வைத்து நிமிர்ந்து பார்.
அறிவு அளவில்லாமல் கிடக்குது...

உலகம் ஒரு விதிகள் இல்லாத நூலகம்.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

பிடிக்காதவர்களைக் 
கொல்லவேண்டுமென்று  நினைத்தால்
உன்னை கொல்லும் நாளும் வரும்...

கொடியவனைக் கண்டு
தூர விலக வேண்டுமென்றால்
இந்த  உலகத்தை காலி பண்ணவேண்டும்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன்னால்  இன்று 
என் சிரிப்புதான் 
பெரிய பொய்யாகிப் போனது.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உச்சரித்தாலே சுடுகின்றத் தீ - காதல்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என்  முகப்புத்தகச் சுவர்
என் கவிதைப் பக்கங்கள்
உன் காதுகளாக ஆக ஆசைப்படுகிறேன்
நான் சொல்வதை இதயத்தில் பதித்துக் கொள்கிறது 
அதுமட்டும்தான் மறுக்காமல்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்