Sunday, January 8, 2012

பெண்மை

புரியாத போதும்
சுவைக்கும் கவிதை
அவில்கின்ற போது
குழப்பும் புதிரிவள்

அன்னை,சகோதரி,
காதலி,மனைவி,
மகள்  ஆகா
எத்தனை பிறப்பு
யோகம் எனக்கு இவளாலே

பாசம்,காதல்,
நேசம், காமம், கண்ணீர்
எத்தனை உணர்வு இவளாலே

மாதராய் பிறக்க 
மாதவம் செய்தவளே!
உன்னை உறவாய் அடைய 
மாதவம் செய்தேன் நான்


1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்