Monday, March 12, 2012

துளிகள் - 4

துளிகள் - 1 | 2 | 3 

என்  இருதயத்தை திருடி
பொறியியல் கல்லூரியில் வைத்து
மருத்துவத்திற்கு பயிற்சி எடுத்தாள் என்னவள்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
மதங்கள் சொல்லிய
பல முட்டாள்தனங்களை
ஏற்றுக் கொண்ட தமிழ் குலமே...

கண்ணன் ராதையாய் "காதல்"
முருகன் வள்ளியாய் "கலப்புத்திருமணம்"
என்ற அறங்களை
ஏற்க மறுப்பது ஏனோ?

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வெறும் உடல்கள் கூடி
பத்துமாத சுமையில் 
பிண்டத்தை புறவாய்வழி துப்பும்
காமம் சொல்லவா மூன்றாம்பால்
தேவைப்பட்டது வள்ளுவனுக்கு...

இல்லை இல்லை
காத்திருப்பு,
பிரிவு, பரிதவிப்பு,
கற்பு, ஒழுக்கம்,
ஊடல்,  கூடல்,
திகட்டாதக் காமம்,
குன்றாத காதல்
சொல்லத்தானே தேவைப்பட்டது
பொய்யாமொழியிலொரு
களவியலும் கற்பியலும்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என்றோ  நான் படித்த
ஒரு கவிஞனின் பேனா
என்னைத் தாக்கி விடுகிறது

இதோ என் எழுத்துக்களில்
இன்னும் அந்தக் காயத் தழும்புகள்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என் பார்வை சீதையின்
பாதம் பட்டு ...
காட்சி அகலிகைகள்
என்  கவிதைகளில் எழுகிறார்கள்...

அது சாபத்தின்
விமோட்சனமா? இல்லை
அதுதான் சாபமா...
என் வாசக கம்பர்களின்
கருத்து ராமாயாணம் சொல்லும் க(அ)தை

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்