Saturday, July 30, 2011

பசுமை மாயம்



பட்டாசுகள் வெடித்து
சிதறுகையில்,
எல்லோர் இருதயமும்
வண்ணத்தில் களித்திருக்கையில்
என் மனம் மட்டும்
வானை கரியாக்கும்
புகையிலும் பூமிக்கு
பூமாரித் தூவும் வெத்து
காகிதத்தில் லயித்து
வருந்துவது ஏனோ?
பசுமை பசுமை
என்று இதழ்கள்
புலம்ப …
பூமிக்கு மாரடைப்பு
வரவைக்கும் பட்டாசை
கைகள் கொளுத்துவது நியாமா!


2 comments:

  1. சரியாக சொன்னீர்கள்... இனி வெடிகள் வெடிப்பதை தவிர்ப்போம்.... பதிவுகளில் கடிகள் போட்டு மற்றவர்களை சந்தோசப்படுத்துவோம்

    ReplyDelete
  2. நிச்சயம் தோழா! சிரிப்போடு கொஞ்சம் சிந்தையும் தருவோம் உலகுக்கு. கருத்துக்கு நன்றி

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்