Tuesday, November 1, 2011

15000 பார்வைகள் - நன்றியுடன் jam

மேடைகள் ஏறுதல் 
பெரிதல்ல 
காற்றினில் உன் பெயர் அதிர்கையில்
கைத்தட்டல் ஓசையில் 
அரங்கம் அதிர்ந்திட வேண்டும்
அதுவே உன்னைப் 
பெற்றவளுக்குப் பெருமை

ஆறாம் விரல் 
மை உமிழ்தல் பெரிதல்ல
உமிழ்ந்த மை எழுத்தாகுதல் பெரிதல்ல 
எழுத்துக்கள் செர்ந்தேழுந்து 
கவியாதல் பெரிதல்ல 
கவி வாசகன் இதயத்தோடு
ஓசையின்றி உரக்கப் பேசவேண்டும்
உண்மை உரைக்கப் பேசவேண்டும் 
அன்றே உண்மைக்
கவிஞனாகிறோம் என் போன்றோர்

15000 முறை 
என் கவிப் பேழை 
திறக்கப்பட்ட சுவடு 
இதோ இன்டர்நெட் மார்போடு 
பச்சை குத்தப்பட்டது 

இன்னும் பயண தூரம் தொலைவு
அது வரை 
வாசகர் துணை வாரீர் 
வாசிக்கும் ஆசையோடு...
உமக்கு வார்த்தை கொண்டு 
சுவாசிக்கும் வித்தை நான் தருகிறேன் 

நன்றியுடன் 
-ramanuJAM

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்