Saturday, January 1, 2011

குடிமகனே!

காட்சியகம் வந்த
பார்வையாளன் போல் ஆனான்
குடிமகன், கண்முன் நடக்கும்
பிரச்சனைகளிடம்...
கண்டாலும் காணாத கண்கள்
தன்னை நெருங்கும்வரை
கவலை கொள்ளாத எண்ணங்கள்

இவைகள் நடை பாதை பூக்கள் அல்ல
வழிப்போக்கனாய் ரசித்திருக்க ...
இவைகள் தம்தம் புத்தகத்தின் பிழைகள்
நம் பாதை முட்கள் 
திருத்தபடாவிடில் கேடு நமக்கென்று
உணர்வாய் குடிமகனே!

புது ஆண்டின் 
துவக்கத்தை 
நம் நல்லெண்ண  மலர்களால் வரவேற்போம்
வாழ்த்துக்களோடு JAM

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்